காரைக்குடி:காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.
கோவிலுார் கொற்றவாளீஸ்வரர், கொப்புடையம்மன், செஞ்சை கிருஷ்ணமூர்த்தி பெருமாள், நகர சிவன்கோயில் சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 29ம் தேதி தொடங் கியது. நவராத்திரி நாட்களில் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் 8ம் தேதி கொப்புடையம்மன் பாரி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.இரவு 8:00 மணியளவில், அம்பாள் வில் அம்புடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு அத்திமரத்து காளிகோயில் வீதி வழியாக மகர்நோன்பு பொட்டலை வந்தடைந்தார்.
இதேபோல கோவிலுார் கொற்றவாளீஸ்வரர், நகரச்சிவன் கோயில் சுந்தரரேஸ்வரர், செஞ்சை கிருஷ்ணமூர்த்தி பெருமாள் நேற்று 9ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் வருகை தந்து தொடர்ந்து இரவு 11:00 மணியளவில் நான்கு சுவாமிகள் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.