பதிவு செய்த நாள்
12
அக்
2019
12:10
கோவை: ஐயப்பன் பூஜா சங்கத்தில் நேற்று துவங்கிய நாமசங்கீர்த்தன திருவிழாவில், அத்திவரதர் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாமசங்கீர்த்தனா டிரஸ்ட், 2003ல் துவங்கப்பட்டது.
ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நாமசங்கீர்த்தன திருவிழா,ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஸ்ரீஐயப்பன்பூஜா சங்கத்தில் நேற்று துவங்கியது.வருங்கால சந்ததியினர் நாமசங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள, நேற்று காலை 9:00 மணிக்கு, பள்ளி மாணவர்களுக்கான நாமசங்கீர்த்தன இசைப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாலை,6:30 மணிக்கு கவுதம் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் அருள்பாலித்த அத்திவரதர் நேற்று சயனதிருக்கோலத்தில் காட்சியளித்தார். 9 அடி நீளமும், 3 அடி அகலத்திலும், சிலை அமைக்கப்பட்டிருந்தது.
ஒரு அடியில் கிரீடமும், காதுகளுக்கு கவசமும், கழுத்தில் ஆபரணங்களும் ஏலக்காய் மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.திரளான பக்தர்கள்தரிசித்து, தீர்த்தமும் சடாரியும் பெற்றனர். நாமசங்கீர்த்தனத்தை ரசித்தனர்.இன்றும் நாளையும்இன்று காலை 9:00 மணிக்கு, நரசிம்மன் ரவிஜோஷி குழுவினரின், ஸ்ரீ ஜெயதேவர் அருளிய அஷ்டபதி மகாகாவியமும், இரவு 8:00 மணிக்கு ஸ்ரீ ஜெயராமன் குழுவினரின் திவ்யநாம பஜனையும், இரவு 11:00 மணிக்கு டோலோத்ஸவமும் நடக்கிறது. நாளை காலை 7:00 மணிக்கு உஞ்சவிருத்தியும், காலை 9:00 மணிக்கு ஸ்ரீ பத்மாவதி திருக்கல்யாணமும் மாலை 4:00 மணிக்கு சுரேஷ் பாகவதர் குழுவினரின் வசந்தோற்சவம் மற்றும் ஆஞ்சநேயர் உற்சவமும் நடக்கிறது.