உடுமலை:உடுமலை அருகே விளாமரத்துப்பட்டி உச்சி மாகாளி யம்மன் கோவிலில் இன்று திருவிளக்கு பூஜை நடக்கிறது. விளாமரத்துப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், பவுர்ணமியையொட்டி, இன்று சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணி முதல், 7:00 மணி வரை, திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து, பவுர்ணமி சிறப்பு பூஜையும் நடக்கிறது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது.