பதிவு செய்த நாள்
14
அக்
2019
02:10
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த பன்னிரு கருடசேவை விழாவில், 27 கிராமத்தை சேர்ந்த பெருமாள் சுவாமிகள், வீதியுலா வந்து அருள் பாலித்தனர். விருத்தாசலத்தில், புரட்டாசி மாதந்தோறும், பன்னிரு கருடசேவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் 21ம் ஆண்டு விழாவையொட்டி, விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், வரதராஜ பெருமாள், ராஜகோபால சுவாமி, வாசவி மகால் பட்டாபிராமர், ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள் உட்பட வண்ணாங்குடிக்காடு, எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், மன்னம்பாடி, இளமங்கலம், கோமங்கலம், தே.கோபுராபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை, மலையடி குன்னத்துார் ஆகிய 27 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இரவு 7:00 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, நுாற்றுக்கும் மேற்பட்ட பாகவதர்கள் பஜனையுடன், பெண்கள், சிறுவர்கள் கோலாட்டம் ஆடியபடி வீதியுலா துவங்கி, அதிகாலை 4:00 மணி வரை நடந்தது. இதற்காக, விருத்தாசலம் கடைவீதி வழியாக பெண்ணாடம், ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று காலை 8:00 மணி முதல், வைணவ மாநாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
ருமாள் சுவாமிகள், வீதியுலா வந்து அருள் பாலித்தனர். விருத்தாசலத்தில், புரட்டாசி மாதந்தோறும், பன்னிரு கருடசேவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் 21ம் ஆண்டு விழாவையொட்டி, விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், வரதராஜ பெருமாள், ராஜகோபால சுவாமி, வாசவி மகால் பட்டாபிராமர், ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள் உட்பட வண்ணாங்குடிக்காடு, எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், மன்னம்பாடி, இளமங்கலம், கோமங்கலம், தே.கோபுராபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை, மலையடி குன்னத்துார் ஆகிய 27 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இரவு 7:00 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, நுாற்றுக்கும் மேற்பட்ட பாகவதர்கள் பஜனையுடன், பெண்கள், சிறுவர்கள் கோலாட்டம் ஆடியபடி வீதியுலா துவங்கி, அதிகாலை 4:00 மணி வரை நடந்தது. இதற்காக, விருத்தாசலம் கடைவீதி வழியாக பெண்ணாடம், ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று காலை 8:00 மணி முதல், வைணவ மாநாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.