பதிவு செய்த நாள்
15
அக்
2019
11:10
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, உற்சவர் அம்பாள் ஊஞ்சல் உற்சவத்தில் அருள் பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் நான்குமாட வீதியை வலம் வருதல், இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி உள்புறப்பாடு நடந்து. ஊஞ்சல் உற்சவத்தில் பதினாரு கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார். இரவு 10:30 மணிக்கு, பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.