புறாக்களுக்கும் மற்ற பறவைகளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. கோழி, வாத்து போன்ற பறவைகளை அறுத்தால் அதன் உடம்பில் பச்சை நிறத்தில் பித்தப்பை இருக்கும். அதிலுள்ள ரசம்(நீர்) கசப்பாக இருக்கும். ஆனால் புறாக்களுக்கு பித்தப்பை கிடையாது. எனவே அவற்றிடம் கசப்புணர்வு இருக்காது. பறவைகள் இரண்டு தினுசாக இருப்பது போல மனிதர்களும் நற்பண்பு, தீயபண்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒருவரிடம் நல்லெண்ணம் இருந்தால் அவரது பேச்சு, செயலில் நற்பண்பு வெளிப்படும். அவர்களின் மனதில் எப்போதும் சாந்தம் இருக்கும். ஆண்டவருக்கு நன்றியதலுடன் இருப்பர். உள்ளத்தில் நல்ல உள்ளம், சாந்தம் உள்ள உள்ளமே! கசப்புணர்வை போக்கி சமாதானம், சாந்தகுணத்தை அனைவரும் ஏற்போம்.