பாபிலோன் என்றாலே தொங்கும் தோட்டம் தான் நினைவுக்கு வரும். மேதியா மலைப்பிரதேசத்தில் பிறந்து பாலைவன நகரமான பாபிலோனுக்கு திருமணமாகி வந்தவள் ராணி அமிட்டீஸ். இவள் எப்போதும் குளிர்ச்சியை உணர்வதற்காக தோட்டம் அமைக்கப்பட்டது. நகரின் வடக்குப்பகுதியில் யூப்ரடீஸ் நதிக்கரை ஓரமாக உள்ள கட்டடங்களின் மீது மரம், செடி, கொடிகள் நடப்பட்டன. நதியில் இருந்து குழாய் மூலம் நீர் பாய்ச்சப்பட்டது. இந்நகரத்தை பெர்சிய மன்னன் கோரஸ் அழித்தான். அழிந்த இந்நகரத்தை ஜெர்மன் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கோல்டேவீ 1899 முதல் 1917 வரை ஆராய்ச்சி செய்தார். ஆராய்ச்சியின் முடிவாக சதுரவடிவில் பக்கத்திற்கு 22 கி.மீ., கொண்டதாக நகரம் இருந்தது. 88 கி.மீ., சுற்றளவில் கோட்டையும், அதில் உள்புறம் திறக்கும் விதத்தில் பெரிய கதவுகளும் இங்கிருந்தன.