அறிவியலில் ஒரு தத்துவம் உண்டு. ஒரு பொருளை புவிஈர்ப்பு சக்தியை விட வேகமாக எறிந்தால் மட்டுமே வானத்தை நோக்கி போகும். அந்த சக்தி புவிஈர்ப்பு சக்தியை விட குறையும் போது மீண்டும் கீழே திரும்பும். நாமும் இயற்கைக்கு உட்பட்டவர்கள் தானே? நம்மிடம் சத்வம், ரஜோ, தமோ என மூன்று குணங்கள் உள்ளன. எது சக்தி வாய்ந்ததோ அது நம்மிடம் மேலோங்கும். தமோ குணத்தை வெல்வது கடினம். இதில் சிக்கியவர்கள் திறமையை நடைமுறைப்படுத்த முடியாது. ரஜோ குணமான சுறுசுறுப்பு வர, தமோ குணமான சோம்பலை வெல்ல வேண்டும். அதற்குத் தேவை ‘நான் இப்படி ஏன் செயல்படுகிறேன்? இதைச் செய்யத் தூண்டுவது எது, என்ற புரிதல் வேண்டும். இதுவே முதல் படி. செயல்களும், அதைச் செய்யத் தூண்டும் குணமும் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்ற தெளிவு வேண்டும். இது இரண்டாவது படி. நம் செயலை எந்த குணம் தூண்டுகிறதோ அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இது மூன்றாவது படி. முதல் இரண்டு படிகளில் ஊன்றாமல் மூன்றாவது படியில் கால் வைக்க முடியாது. மற்றவர்களுக்கு பயந்தோ, வீம்பாகவோ செய்யும் மாற்றங்கள் வெறும் புறத்தோற்றத்தை மட்டுமே உருவாக்கும்
உதாரணமாக சோம்பல், அதிக நேர தூக்கம் எல்லாம் தமோ குணத்தின் வெளிப்பாடு. இந்த குணத்தில் இருந்து வெளியே வராமல் தூக்கம், சோம்பலை வெல்ல முடியாது. ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது“ என்பது தமோ குணத்திற்கும் பொருந்தும். ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஆசிரமத்தில் குருநாதருக்கு மற்றவர் விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி இருந்தது. ஒருநாள் எலி ஒன்று அவர் முன் தயங்கிபடி வந்தது. ‘என்ன வேண்டும் உனக்கு?“ எனக் கேட்டார். “தரிசிக்க வருவோரின் குறைகளை தீர்த்து வரம் தருகிறீர்களே...ஆசிரமத்தில் உள்ள பூனை கொன்று விடுமோ என பயமாக உள்ளது. எனவே என்னை பூனையாக மாற்றுங்கள்“ என கெஞ்சியது. அவரும்