பதிவு செய்த நாள்
21
அக்
2019
12:10
புதுச்சேரி: புதுச்சேரியில், கிருஷ்ணபிரேமிக பஜனை மண்டலி சார்பில், சாரதாம்பாள் கோவில் உள்ளிட்ட நான்கு கோவில்களில், உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம் நடந்தது.
திருவிசலுார் ஸ்ரீதரவேங்கடேச அய்யாவாள் புண்ய உற்சவம் வரும் நவம்பர் 17ம் தேதி பஜனை, சங்கீத கச்சேரியுடன் துவங்கி26ம் தேதி கங்காஸ்நானத்துடன் முடிகிறது. அதனை முன்னிட்டு, புதுச்சேரியில் நேற்று உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம் நடந்தது. ரெயின்போ நகர் சுமூக விநாயகர் கோவிலில் காலை 7:15 மணி முதல் 8:00 வரையும், பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் காலை 8:15 முதல் 9:00 வரையும், குறிஞ்சி நகர் வலம்புரி ஞானவிநாயகர் கோவிலில் காலை 9:15 மணி முதல் 10:15 வரையும், எல்லைபிள்ளைச்சாவடி சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் காலை 10:30 மணி முதல் பகல் 12:30 வரையும் உஞ்சவ்ருத்தி நாமசங்கீர்த்தனம் நடந்தது. ஏற்பாடுகளை, புதுச்சேரி கிருஷ்ணப்பிரேமிக பஜனை மண்டலியினர் செய்திருந்தனர்.