ஓமலூர்: காடையாம்பட்டி, காருவள்ளி வெங்கட்ரமணர் கோவிலில், புரட்டாசி தேரோட்ட திருவிழாவையொட்டி, நேற்று காலை, பெருமாளுக்கு, கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட் ரமணருக்கு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சயனோற்சவம் விடைசாதித்தல் நடந்து, தேரோட்ட விழா நிறைவடைந்தது.