புதுச்சேரி: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, வரும் 23ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. புதுச்சேரி, சின்ன சுப்புராயபிள்ளை வீதி,அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. இதனையொட்டி, தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு சிறப்பு அலங்காரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.கடந்த 18ம் தேதி காலை அபிஷேகமும், கூழ்வார்த்தல் மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று இரவு 7:00 மணிக்கு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 23ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.