Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆயிரம் பொன் சப்பரத்தில் அகரம் ... சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரைக்கோவில் உட்பிரகாரம் திறப்பு
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் கடற்கரைக்கோவில் உட்பிரகாரம் திறப்பு

பதிவு செய்த நாள்

22 அக்
2019
11:10

மாமல்லபுரம் : மாமல்லபுரம் கடற்கரைக்கோவிலில் மூடியிருந்த, கருவறை சன்னிதிகள், தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், பயணியர் அவற்றை கண்டு, மகிழ்ச்சி அடைகின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள, கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால கலை சிற்பங்களை காண, பயணியர் இங்கு வருகின்றனர்.இச்சிற்பங்களின் தொல்லியல் தன்மை கருதி, ஐ.நா., சபையின் கலாசார பிரிவு, இவற்றை, பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்து உள்ளது.வழிபாடு இல்லைஇங்குள்ள கடற்கரை கோவிலை, ராஜசிம்மன் என்றழைக்கப்படும், இரண்டாம் நரசிம்மவர்மன், சைவ, வைணவ வழிபாடு கருதி, தனித்தனி சன்னிதிகளுடன், பாறைகளில் அமைத்து உள்ளார். கிழக்கு நோக்கிய, பெரிய கோபுரத்துடன் கூடிய சன்னிதி, கருவறையில், சேதமடைந்த சிவலிங்கம், சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பம்; சுவற்றின் வெளிப்புறம் சிற்பங்கள் என, இக்கோவிலில் உள்ளது.மேற்கு நோக்கிய, சிறிய கோபுரத்துடன் கூடிய சன்னிதி, கருவறையில் சிவலிங்கம் அகற்றி, சுவற்றில், சோமாஸ்கந்தர் சிற்பம், வெளிப்புறம் சிற்பங்கள் என, அமைந்துஉள்ளன.

இவ்விரு சன்னிதிகள் இடையில், விமான கோபுரம் இன்றி, ஸ்தலசயன பெருமாள் சன்னிதி உள்ளது. பெருமாளிற்கு, இங்குள்ள பாறையிலேயே, 9 அடி நீள சிலை, படுத்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது.கருவறை மூடப்படும்இக்கோவிலில், பல நுாற்றாண்டுகளாக வழிபாடு இல்லை. பாரம்பரிய சின்னமாக இருப்பதால், அதன் அழகை, சுற்றுலாப் பயணியர் ரசிக்கின்றனர்.கடற்கரை பகுதி கோவில் என்பதால், கடற்காற்றின் உப்புத்தன்மை, சுற்றுப்புற மாசு ஆகியவற்றால், சிற்பங்கள் உருக்குலைந்து சீரழிகின்றன. தவிர, கோவில் உட்பிரகாரத்தில் செல்லும் பயணியர், சிற்பங்களை தொடுவதால், மண் கலவையால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் சேதமாகின.இதனால், 2017 ஜனவரியில் இருந்து, சன்னிதியில் பயணியர் செல்ல, தடை ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், 11ல், முறைசாரா மாநாட்டு பேச்சிற்காக, இங்கு சந்தித்தனர்; சிற்பங்களை ரசித்தனர். இவர்கள் காண கருதி, சன்னிதிகள் கருவறை பகுதி திறக்கப்பட்டது. தற்போதும் திறந்திருப்பதால், இங்கு குவியும் பயணியர், கருவறை சுவாமியர், உட்பிரகார சிற்ப கலையம்சங்களை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். சில நாட்களில், கருவறை மூடப்படும் என, தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar