பதிவு செய்த நாள்
22
அக்
2019
11:10
நாகப்பட்டினம்: திருப்புகலுார் அக்னீஸ்வரர் கோவில் யானை, வயது மூப்பு காரணமாக முக்தியடைந்தது. நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருப்புகலுாரில், அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
வாஸ்து தலமானதும், அப்பர் ஐக்கியமாகிய சிறப்புடைய இக்கோவில், வேளாக்குறிச்சி ஆதீன கர்த்தர், 18வது குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவிலில், சூலிகாம்பாள் என்ற பெண் யானை, சிறு வயது முதல் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை, பக்தர்களிடையே வெகு பிரபலமாக இருந்து வந்தது. இந்நிலையில், 70 வயதை எட்டிய, சூலிகாம்பாள் யானை, வயது மூப்பு காரணமாக, நேற்று காலை, 11:00 மணிக்கு, மரணமடைந்தது. யானையின் உடலுக்கு, அப்பகுதி பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். பின், கோவிலின் முருகநாயனார் தோட்டத்தில், நேற்று இரவு, 8:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.