திருப்புத்துாரில் கந்தசஷ்டி விழா அக்.28ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2019 11:10
திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.,28 ல் துவங்குகிறதுகுன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கந்தசஷ்டி விழா ஏழுநாட்கள் நடைபெறும். அக்.28 மாலை 6:00 மணிக்கு முருகனுக்கு அபிஷேக,ஆராதனை நடந்து விழா துவங்கும். தொடர்ந்து தினசரி மாலை வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். நவ.2ல் காலை 10:30 மணிக்கு சண்முக அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும். தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும். நவ.3ல் காலை 10:30 மணிக்கு மேல் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டினை திருமுருகன் திருப்பேரவையினர் செய்கின்றனர்.