கருப்பணார் சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2019 12:10
கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் கருப்பணார் சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் விநாயகர், கருப்பணார், தொப்பைய தாய் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது.
தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழா இரண்டு நாட்கள் நடந்தது.நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடு, புண்ணியாகவஜனம், அங்குரார்ப்பணம், அஷ்டபலி, வாஸ்து பூஜை, பிரவேச பலி பூஜை நடந்தது.யாகசாலை பிரவேசம் செய்து 11 கலசங்களை ஆவாகனம் செய்தனர். வேதிகை அர்ச்சனை, தத்துவ அர்ச்சனை நடந்த பின் யாகம் நடந்தது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பசு பூஜை செய்யப்பட்டு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. மகாபூர்ணாகுதி, யாத்ராதானத்திற்கு பின் விநாயகர், கருப்பணார், தொப்பைய தாய் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பகலசங்களில் உள்ள புனித நீர் ஊற்றி மண்டலாபிஷேக வைபவம் நடந்தது. பின்னர், சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டனர். இரவு கருப்பணார் சுவாமி வீதியுலா நடந்தது.