இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தீபாவளி என்றால் பட்டாசு தான். இந்த கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலையும் கவனத்தில் கொள்வது அவசியம். பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது எப்படி:
* இரவில் பயன்படுத்தப்படும் ‘ஒளி’ ஏற்படுத்தும் பாட்டாசுகளை வீட்டுக்கு வெளியே வைப்பது நல்லது. * பட்டாசு வைக்கும் இடத்தில், எளிதில் தீ பிடிக்கும் வகையிலான பொருட்கள் இருக்கக்கூடாது. * குழந்தைகளை பட்டாசுக்கு அருகில் வர விட வேண்டாம். வீட்டு விலங்குகளையும் அருகில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். * பெரியவர்கள் மேற்பார்வையில் மட்டுமே, சிறுவர்களை பட்டாசு பற்ற வைக்க விட வேண்டும். * பட்டாசு பற்ற வைப்பதற்கு, நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்துவது நல்லது. தீப்பெட்டி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. * பட்டாசு பற்ற வைத்தவுடன், அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து விட வேண்டும். * பட்டாசு வெடிக்கவில்லையெனில், அதை அப்புறப் படுத்த வேண்டும். மீண்டும் அதை பயன்படுத்துவதை தவிர்க்கவும். * ராக்கெட் வெடி போன்ற உயரத்தில் பறக்கும் பட்டாசுகளை, திறந்த வெளி இடத்தில் வைத்து வெடிக்க வேண்டும். * தண்ணீர் அல்லது தீ அணைக்கும் கருவி ஆகியவற்றை அருகில் வைத்திருப்பது நல்லது. * இளைஞர்கள் சிலர் கையில் வைத்துக் கொண்டே பட்டாசை, பற்ற வைக்கின்றனர். இது தவறு. * சாலைகளின் நடுவே பட்டாசு பற்ற வைக்கக் கூடாது.