பதிவு செய்த நாள்
23
அக்
2019
02:10
பண்டிகைகளிலேயே அதிகம் செலவழிப்பது தீபாவளிக்கு மட்டும் தான். இந்த நாளில் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் வழியில் கூட புத்தாடை, இனிப்பு, பலவகை உணவுகள், பட்டாசு என தாராளமாக செலவாகும். இதற்கு ஏராளமாக பணம் வேண்டும். இப்பணத்திற்கு அதிபதி குபேரலட்சுமி. எல்லா ஆண்டுகளும் தீபாவளியை கொண்டாட குபேரலட்சுமியை வழிபட வேண்டும். அது மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் தீபாவளி போல் செழிப்பாக வாழ, வெள்ளிக்கிழமைகளில் குபேர லட்சுமியை பூஜிப்பது நன்மை தரும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியம் ஆகிய பொருட்களை லட்சுமி பூஜையின் போது படைக்க வேண்டும். ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ ஆகிய மந்திரங்களை 108 முறை ஜெபித்து தீபம் காட்ட வேண்டும்.