Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் நகை காணிக்கை செலுத்த ... கீதையை பின்பற்றி வாழ விஜயேந்திரர் பேச்சு கீதையை பின்பற்றி வாழ விஜயேந்திரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் பராமரிப்பின்றி கோயில் விடுதிகள் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் பராமரிப்பின்றி கோயில் விடுதிகள் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

08 நவ
2019
01:11

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தங்கும் விடுதிகள் பராமரிப்பின்றியும், பக்தர்கள் பயன்பாடின்றியும் முடங்கியதால் அரசு நிதி ஒரு கோடி ரூபாய் வீணாகியது. இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படவில்லை. கழிப்பறை பராமரிப்பு படுமோசமாக உள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஏழை பக்தர்கள் தனியார் லாட்ஜில் தங்க வசதியின்றி, கோயில் ரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டு இரவில் அங்கேயே பாதுகாப்பின்றி ஒய்வெடுத்தனர்.

இதனை தவிர்க்க கோயில் நிர்வாகம் 2014ல் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் 1 கோடி ரூபாய் செலவில் ஆண், பெண்களுக்கு தனித்தனி இலவச தங்கும் விடுதிகள் கட்டியது.

இங்கு 400 பக்தர்கள் தங்கும் அளவுக்கு இடவசதி, மின்சாரம், குடி நீர், கழிப்பறை வசதிகள் மற்றும் 100 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக பார்க்கிங் வசதியும் உள்ளது. ஆனால் கோயில், ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து ஒன்றரை கி.மீ., ல் இந்த இலவச தங்கும் விடுதிகள் உள்ளதால் 95 சதவீதம் பக்தர்கள் விடுதியை பயன்படுத்த முன்வரவில்லை.

முடக்கம்: ராமேஸ்வரத்தில் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்டில் வந்திறங்கும் பக்தர் களுக்கு கோயில் இலவச விடுதிகள் இருக்கும் தகவல் தெரிவதில்லை.

இந்த விடுதி குறித்து பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் விளம்பர வழிகாட்டு பலகை வைத்து போலீசார், தனியார் காவலர்கள் மூலம் பக்தர்களுக்கு வழிகாட்ட இந்து அமைப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக் காததால் ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்ட இலவச தங்கும் விடுதிகள் பராமரிப் பின்றியும், பக்தர்கள் பயன்பாடின்றியும் முடங்கியது.

கேட், ஜன்னல் சேதம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் கோயிலுக்கு வந்த பக்தர்களில் 5 சதவீதம் பேர் கூட இந்த விடுதியில் தங்காத நிலையில், தற்போது விடுதி முன்புற கேட் சேதம் அடைந்துள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி பயனற்ற நிலையில் உள்ளது.

கழிப்பறை அசுத்தமாகி துர்நாற்றம் வீசுவதோடு அலங்கோலமாய் காட்சியளிக்கிறது. இதனை சரி செய்த பராமரிக்கவும் கோயில் நிர்வாகம் முன் வரவில்லை.

மேலும் விடுதி வளாகத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேலம் மரங்களால் விஷ ஜந்துக்களிஜ் புகலிடமாக உள்ளதால், அவ்வப்போது தங்கும் 5 சதவீதம் பக்தருக்கும் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

புதர் மண்டிய விடுதி: பயன்பாடின்றி கிடக்கும் இலவச விடுதியில் பக்தர்கள் தங்குவதற்கு வழி தெரியாமல் இன்றும் அக்னி தீர்த்த கடற்கரை, தனியார் காட்டேஜில் பக்தர்கள் ஒய்வெடுக் கின்றனர். எனவே விடுதியில் உள்முள்செடி, புதர்களை அகற்றி அழகு செடிகள், நிழல் தரும் மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பழுதுநீக்க வேண்டும். கழிப்பறைகளை தினசரி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

விடுதியில் இருந்து கோயிலுக்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்தி, விடுதி குறித்து
ராமேஸ்வரம் வரும் பக்தர்களிடம் விளம்பரப்படுத்த மாவட்ட நிர்வாகம், போலீசாருடன் இணைந்து அறநிலையத்துறை செயல்பட்டால் 5 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் இலவச தங்கும் விடுதி புத்துயிர் பெறும். பக்தர்களும் பயனடைவார்கள்.

பக்தர்கள் நலனில் அலட்சியம் காட்டாமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகன வசதி தேவை: ஏ.நாகராஜ், ராமேஸ்வரம் லாட்ஜ் உரிமையாளர் சங்க செயலாளர்: பக்தர்கள் காணிக்கையில் அமைத்த இலவச விடுதியை பராமரிக்க இந்து அறநிலையத்துறை கவனம் செலுத்தாமல் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள விடுதி வீணாகி வருகிறது. விடுதிக்கு பக்தர்கள் வர பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் வழிகாட்டும் விளம்பர பலகை வைத்து, விடுதியில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டம் நடத்துவோம்: ராமமூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி பொதுச் செய லாளர்: கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்பாடின்றி முடங்கிய கோயில் இலவச விடுதியில், பக்தர்கள் தங்குவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பெயருக்கு இலவச விடுதியை கட்டி விட்டு கோயில் நிர்வாகம் ஒதுங்கி கொண்டது. விடுதிக் குள் மின் விசிறிகள் பழுதாகி விட்டன. சேதம் அடைந்த ஜன்னல், இரும்புகேட்டை சீரமைத்து முழுமையாக பக்தர்கள் பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்துவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar