பதிவு செய்த நாள்
09
நவ
2019
01:11
திருப்பூர்: திருப்பூர், விருமாண்டம்பாளையம் கிராமம், ஆதியூர் - அம்மாபாளையம் ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கும்பாபி ஷேக விழா, நாளை நடக்கிறது.
கும்பாபிஷேக பூஜைகள், நேற்று காலை, கணபதியாகத்துடன் துவங்கியது. மாலையில், ஆதியூர் ஆதீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, முதல்கால வேள்வி பூஜை துவங்கியது. இன்று, காலை இரண்டாம்கால வேள்வியும், மதியம் மூன்றாம் காலம், மாலையில், நான்காம் கால வேள்வி பூஜைகள் நடக்கின்றன. நாளை காலை, 5:00 மணிக்கு, நான்காம்கால வேள்வி பூஜை முடிந்து, கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுகின்றன.காலை, 7:45 மணிக்கு மேல், 8:45க்குள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமாகாளியம்மன் கோபுர கலசம் மற்றும் மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா அபிஷேகம், அலங்காரபூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.நாளை காலை, 9:30 மணிக்கு, கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமி தலைமையில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், விஜயமங்கலம் அப்பரடிப்பொடி புலவர் சொக்கலிங்கனார் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர்.