துன்பங்களை அனுபவிக்கும் போது நாம் இறைவனிடம் முறையிடலாம். ஆனால் அப்படி பலமுறை தொழுதும் பயன் கிடைக்கவில்லை என்றால் அவனின் கோபத்திற்கு ஆளாகிவிட்டதாகப் பொருள். இறைவன் எதை விலக்கி உள்ளானோ அதனை மனிதன் செய்யும் போது ரோஷம் அடைகின்றான். அதில் பொய்யும் ஒன்று” என நாயகம் குறிப்பிடுகிறார். இறைவனால் விலக்கப்பட்ட விஷயங்களில் முதன்மையானது பொய். யாரொருவன் பொய் சொல்கிறானோ அவன் இறைவன் தரும் கடும் சோதனைகளை அனுபவிப்பான். சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கும் கேடு விளையட்டும், அவன் நாசமாகட்டும் என்கிறார். உண்மையின் பெருமையை விளக்கும் கருத்துக்கள் இதோ!
* உண்மை பேசுவது மனிதனை நன்மையின் பக்கம் இழுத்துச் செல்கிறது. நன்மை சொர்க்கத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது.
* நிச்சயமாக ஒருவன் உண்மையே பேசினால், இறைவனிடத்தில் சித்தீக் (உண்மையாளர்) என எழுதப்படும்.
* பொய் சொல்வது மனிதனை பாவங்களின் பக்கம் இழுத்துச் செல்கிறது. பாவங்கள் அவனை நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது.
* ஒரு மனிதன் ஒரு பொய் சொன்னால் அதன் வாசனை வானவர்களை ஒரு மைலுக்கு அப்பால் நிறுத்தி விடும். இறைவனால் அளிக்கும் நன்மைகள் வானவர்கள் மூலமாகவே வந்தடையும். பொய் பேசுபவர்களால் அந்த நன்மையை அடைய முடியாது
* நீங்கள் உண்மை பேசுவதைக் கடைபிடிப்பீர்களாக! ஏனென்றால், அது சொர்க்க வாசல்களில் ஒன்றாகும்.