பாடுபட்டு தேடிய பணத்தை சேமிக்க ஆயிரம் வழிமுறை உண்டு. திருவள்ளுவர் சேமிக்க வழிகாட்டுவதைப் பாருங்கள். ஈகை என்னும் அதிகாரத்தில், அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றார் பொருள் வைப்புழி” என்கிறார். ஏழைகள் பசியால் வாடும் போது, பசி போக்குபவனுக்கு கடவுளின் அருள் கிடைக்கும். அந்த புண்ணியம் சரியான நேரத்தில் நம் உயிரைக் காக்க துணை நிற்கும் என்கிறார். தர்மம் தலை காக்கும் என இதைச் சொல்வர். அருள் என்னும் லாபம் கிடைக்க இதை விட சிறந்த முதலீடு வேறில்லை.