Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நோய்க்கு மருந்தாவான்! மனுஷனை மனுஷன் மதிக்கணும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எப்போதும் போல் இருங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
01:11

ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களை அழைத்தார்.‘‘நம் நிறுவனத்தின் மேலாளர் பதவிக்காலம் இன்னும் ஆறுமாதத்தில் முடியப்போகிறது. அவருக்குப் பிறகு உங்களில் ஒருவரை மேலாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளேன். மாதம் 5 லட்சம் சம்பளம். உங்கள் நடவடிக்கைகளை இந்த ஆறுமாதமும் கூர்ந்து கவனிப்பேன். யார் தகுதியுடையவர் எனக் கருதுகிறேனோ, அவரே மேலாளர் ஆவார்,” என்றார்.ஐந்து லட்சம் சம்பளம், கார், பங்களா வசதியெல்லாம் கிடைத்தால் யார் விடுவார்...ஊழியர்கள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தனர். பலர் வேலைநேரம் முடிந்த பிறகும், ஏதாவது ஒரு வேலையை பரபரப்பாக செய்வது போல் நாடகமாடினர்.ஆறுமாதம் கழிந்தது. அன்று தான் மேலாளர் பதவிக்குரிய நபர் தேர்ந்தெடுக்கப்பட இருந்தார். எல்லார் மனதிலும் திக் திக்..ஒரே ஒருவரைத் தவிர. அவர் வழக்கம் போல், தன் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரருகே சென்ற தலைவர், “நீங்கள் தான் இனி நிறுவனத்தின் மேலாளர்” என்றார்.எல்லாருக்கும் சப்பென்றாகி விட்டது.‘‘ஐயா! நாங்கள் எவ்வளவு கடுமையாகப் பாடுபட்டோம், அதிலும் இந்த ஆறுமாத காலத்தில் எவ்வளவு துõரம் போராடினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரோ, வழக்கமான பணியைத் தான் செய்தார். அவரைப் போய் தேர்ந்தெடுத்தீர்களே!” என்றனர்.‘‘ஊழியர்களே! அவர் எட்டு மணி நேரத்துக்குள் 16 மணி நேர வேலையை முடிப்பவர். நீங்களோ 16 மணிநேரம் வேலை செய்தும், நான்கு மணி நேர வேலையைக் கூட நல்லபடியாக செய்யவில்லை என்பதை உங்கள் வேலைக்குறிப்பு எடுத்துச் சொல்கிறது. மேலும், பதவியைத் தேடி அவர் ஓடவில்லை. ஆசைப்படவும் இல்லை. ஆசையில்லாத ஒருவரால் தான், கம்பெனியின் நிதிநிர்வாகத்தையும் மோசடி ஏதுமின்றி செய்ய முடியும்.  அவர் அவராகவே இருந்தார். எனவே, அவரைத் தேர்ந்தெடுத்தேன்,” என்றார்.குறிப்பிட்ட நேரத்தில், தரப்பட்ட பணியை ஒழுங்காகச் செய்தாலே போதும். பதவியும், பணமும் தேடி வரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar