பதிவு செய்த நாள்
14
நவ
2019
11:11
தர்மபுரி: ஐப்பசி பவுர்ணமியையொட்டி, தர்மபுரி அடுத்த விருபாட்சிபுரம் ராகவேந்திரர் கோவிலில், லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று முன்தினம் ஐப்பசி பவுர்ணமி தினத்தில், அன்னாபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. அன்றிரவு, தர்மபுரி அடுத்த விருபாட்சி புரத்தில் உள்ள, ராகவேந்திரர் கோவிலில், கமிட்டி தலைவர் வெங்கடேசன் தலைமையில், ஏராளமான பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி சுவாமி வழிபாடு நடத்தினர். நேற்று காலை, 11:30 மணிக்கு பவுர்ணமி சத்யநாராயண பூஜை, 12:30 மணிக்கு தீர்த்தப்பிரசாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், பாண்டுரங்க விட்டலா பஜனை குழுவினர், பெண்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர், சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் சுபத்திராசீனிவாசன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.