பதிவு செய்த நாள்
14
நவ
2019
01:11
விருத்தாசலம் : கிருத்திகைகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய் வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல், சந்தனக்காப்பு அலங் காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.
மணவளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
கருவேப்பிலங்குறிச்சி சாலை, வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது.
சுப்ரமணிய சுவாமிக்கு சங்காபிஷேகம் நடந்தது. வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள்பாலித்தார். உற்சவர் சுப்ரமணிய சுவாமி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை லோகு குருக்கள் செய்திருந்தார்.