சரணம் விளித்தால்..


சரணம் விளித்தால்..


சரணம் விளித்தால்...மரணம் இல்லை...
சாஸ்தா நாமம்...அருளின் எல்லை...

தருணம் இது தான் சரணம் போடு...
தர்ம சாஸ்தா பாதம் பாடு...

சரணம் விளித்தால்...மரணம் இல்லை...
சாஸ்தா நாமம்...அருளின் எல்லை...

காக்கும் தெய்வம் திருமால் நாமம்...
கருணை செய்யும் ஈஸ்வரன் நாமம்...

கலந்து மகிழ்ந்த ஐயனின் நாமம்...
கூவி வந்தால் புவியில் ஷேமம்....

சரணம் விளித்தால்...மரணம் இல்லை...
சாஸ்தா நாமம்...அருளின் எல்லை...

காடும் மேடும் வீடும் வாசல்...
கல்லும் முள்ளும் மல்லிகை மெத்தை...

ஆடும் மனத்தை அடக்கி வா...வா...
ஐயன் மேடை நாடி வா...வா...

சரணம் விளித்தால்...மரணம் இல்லை...
சாஸ்தா நாமம்...அருளின் எல்லை...

நெய்போல் உருகும் மனதில் ஐயன்...
நேரில் வருவான் நிறையத்தருவான்...

குருவை நாடு மாலை சூடு...
கோடி ஞான ஜோதியை பாடு

சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா...
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா...

தருணம் இது தான் சரணம் போடு...
தர்ம சாஸ்தா பாதம் பாடு...

சரணம் விளித்தால்...மரணம் இல்லை...
சாஸ்தா நாமம்...அருளின் எல்லை...

ஐயப்பா..சாமி..ஐயப்பா...