ஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய வேண்டுமா?



கடவுள் என்பவர் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் மட்டுமே தனது அருளை அதிக அளவில் பக்தர்களுக்கு கொடுப்பார் என்றும் மற்ற நாட்களில் அருள் வழங்கும் அளவை குறைத்துக்கொள்வார் என்றும் யாரிடமாவது கூறியுள்ளாரா? இல்லையே...

உண்மையான பக்தன் நம்மை தேடி வரமாட்டானா... அவனுக்கு நாம் எந்நேரமும் அருள்பாலிக்க வேண்டுமே.. என்று பகவான் நமக்காக  காத்து கொண்டிருக்கிறார்.  அப்படி அருளை அள்ளி வழங்க இறைவன் தயார் நிலையில் இருக்கும் போது, நாம் மட்டும் ஏன் திருவிழா காலத்தில் மட்டும் கோயிலுக்கு சென்று கூட்டத்தில் முண்டியடித்து கொண்டு சாமி தரிசனம் செய்வது, அறைகுறையாக வழிபாடு செய்வது என செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

சபரிமலையில் கார்த்திகை முதல் தேதி முதல் தை மாதம் வரை மண்டல கால பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்காலங்களில் பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து குவிந்து விடுவார்கள். மலைப்பகுதியில் உள்ள சபரிமலையில் கோடிக்கணக்கான பக்தர்கள் சீசன் சமயத்தில் ஒரே சமயத்தில் தரிசனத்திற்கு செல்வதால் சபரிமலையே ஸ்தம்பித்து விடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. யாரும் சரிவர சுவாமியை தரிசனம் செய்ய இயலாமல் போய்விடுகிறது. வயதான பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த சீசன் சமயத்தில் சென்று அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமின்றி விபத்தும் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த சீசன் சமயத்தில் புல்மேட்டுப்பகுதியில் விபத்து ஏற்பட்டு விலை மதிப்பில்லா பல உயிர்கள் பறிபோனது. இதனால் அந்த புனிதமான மலையின் புனிதம் கெட வாய்ப்பு ஏற்படலாம்.

இப்போதெல்லாம் மாதமாதம் தமிழ் மாதப்பிறப்பிற்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது.  அதுமட்டுமில்லாமல்,  பிரதிஷ்டை தினவிழா, ஓணம், சித்திரை ஆட்டத்திருநாள் என சில மாதங்களில் இருமுறை கூட சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும். அப்போது சபரிமலை சென்று ஐயப்பனை சிறப்பாக, நிம்மதியாக, எளிதாக தரிசனம் செய்து வேண்டும் வரங்களை பெறலாமே.

எப்போது சென்றாலும் அள்ள அள்ளக் குறையாமல் அருளை வாரி வழங்கும் நம் ஐயப்பனை பற்றி நாமே புரிந்து கொள்ளாவிட்டால் எப்படி?

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்