சபரிமலை கோயிலில் உள்ள பிற சன்னிதிகள்



இருமுடி : சபரிமலையை நோக்கி புறப்படும் போது இருமுடிக் கட்டி புறப்படுவார்கள். இவற்றுள் ஒரு முடியில் சுவாமிக்குரிய அபிஷேக நிவேதனப் பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் நம் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் இருக்கும். நாம் போகப் போக நம் உணவுப் பொருட்கள் குறைந்து கொண்டே போய் இறைவனின் சன்னதியருகே செல்லும்போது நம் உணவுப் பொருட்கள் அடங்கிய முடி குறைந்திருக்கும். சுவாமி முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும். இது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துவது. மானுடராய்ப் பிறந்த நாம் இறைவனைத் தேட ஆரம்பிக்கும் போது இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும் நம் உலக தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்கிறது. இரண்டு அம்சங்களுடனேயே தான் நாம் இறைவனைத் தேடுகிறோம். அந்த தேடலில் மெய்ஞ் ஞானம் கிட்டக் கிட்ட நம் லௌகீகப்பற்று குறைந்து மறைந்து போகிறது. இறைப் பக்தி ஒன்றுதான் மிஞ்சுகிறது. அப்பொழுதான் இறைவனடியும் தரிசனமாகிறது.

மஞ்சமாதா : ஐயப்பன் சன்னிதிக்குப் பின்புறம் மாளிகாபுரத்தம்மன் சன்னிதி உள்ளது. இந்த தேவியை மஞ்சள் மாதா என்றும் அழைப்பது உண்டு. மகிஷியின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி, ஐயப்பன் முன் மண்டியிட, அவளுக்கு மாளிகாபுரத்தம்மன் என்று ஐயன் பெயர் சூட்டி அருளினார் ஐயன். அதனைத் தொடர்ந்து அந்த தேவி, இங்கு மாளிகா புரத்தம்மனாக எழுந்தருளினாள். மேலும், ஐயப்பனை மணக்கக் காத்திருக்கும் கன்னித் தெய்வமாகவும் திகழ்கிறாள். இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி, பூஜை செய்ய வேண்டும்.) இந்த மாளிகாபுரத்தம்மன் சன்னிதியில் வேண்டிக்கொண்டால், திருமண பாக்கியம் கைகூடும். இந்தச் சன்னிதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ஜாக்கெட் துணியை, திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் தைத்து, அணிந்துகொண்டால், உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம் இங்கு தான் கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கிவருவர்.

நவகிரக சன்னிதி:
இந்தச் சன்னிதி, மஞ்சள் மாதா சன்னிதிக்குப் பின்புறம் உள்ளது. இங்குள்ள நவகிரகங்கள், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஜாதக ரீதியாக கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். தோஷம் உள்ளவர்கள், இந்தச் சன்னிதியில் கொடிகொட்டிப் (ஒருவகையான மேளம் இசைத்து) பாடல் பாடி வழிபடுவது வழக்கம்.

மணிமண்டபம்: மஞ்சள் மாதா சன்னிதியின் பின்புறத்தில் மணிமண்டபம் உள்ளது. இந்த இடத்தில்தான், ஆதிகாலத்தில் அகத்தியர் லலிதா சாஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால், அல்லது ஸ்லோகம் சொன்னால், நாம் வேண்டியது நடக்கும். சபரிமலைக்கு மணி கட்டுவது என்று சொல்லுவது உண்டு. தாம் சபரிமலைக்கு வந்த நோக்கத்தை வேண்டுதலாகச் சொல்லி இந்த மண்டபத்தில்தான் ஒவ்வொரு பக்தரும் மணி கட்டுகிறார்கள். இந்த மணியிலிருந்து எழும் ஓசையானது. நமது வேண்டுதல்களை எடுத்துச் செல்லும் ஓசையாக ஐயப்பனிடத்தில் மாறுவதாகவும், அதனால் குறைகள் தீர்ந்து வேண்டுதல்கள் யாவும் உடனுக்குடன் நடைபெறுவதாக நம்பிக்கை. சபரிமலையில் பிற இடங்களில் மணி கட்டுவதை விட, இந்த மணி மண்டபத்தில் கட்டுவதே சிறப்பு
    
ஜோதி தரிசனம்: எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகரசங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்று மட்டும், தியானத்திலிருந்து சாஸ்தா கண் திறப்பாக ஐதீகம். அதன் தொடர் நிகழ்வாக, ஜோதி தெரிவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை, வானில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கும். ஆனால், ஜோதி தெரியும் வைபவத்தின் போது எல்லா நட்சத்திரங்களும் மறைந்து, ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும். ஒளிரும் அப்படி ஒளிரும் நட்சத்திரமே சாஸ்தாவாக நம்பப்படுகிறது.அத்துடன் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாகவும் ஐயப்பன் காட்சிதருவார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்