சன்னிதானத்தில் மொபைலுக்கு வருகிறது கட்டுப்பாடு

டிசம்பர் 20,2018



சபரிமலை : சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசி, மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு வருகிறது. மூலவர் படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசிகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊடகங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஊடகங்களுக்கும், தேவசம்போர்டுக்கும் இடையிலான புரிதல் அடிப்படையில் ஊடகங்களை கண்டு கொள்ளவில்லை. இதனால் அனைத்து நாட்களிலும் சன்னிதானத்தில் ஊடகங்கள் படம் எடுக்கின்றனர். கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் மூலவரின் அபிஷேகம், அலங்காரம் போன்றவை வெளியானது. அலைபேசி கேமரா மூலம் சன்னதி முன்நின்று சுலபமாக படம் எடுத்து விடுகின்றனர். இதை தவிர்க்க சன்னிதானத்தில் அலைபேசியை சுவிட்ச்ஆப் செய்து பைகளில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவு படி அனுமதிக்கப்பட்டுள்ள நாட்களில் மட்டும் ஊடகங்களை சன்னதி முன்பு அனுமதிக்க ஆலோசனை நடந்து வருவதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்