Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அரசுகாத்த அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு அரசுகாத்த அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அரசுகாத்த அம்மன்
  ஊர்: காஞ்சிபுரம்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி,ஆடி கடைசி வெள்ளியில் அம்மன் உலா நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் இடம்பெற்றுள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அரசுகாத்த அம்மன் திருக்கோயில் பஸ்ஸ்டாண்ட் அருகில் காஞ்சிபுரம்.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு சம்பத்விநாயகர், வள்ளிதெய்வானை சமேத பாலசுப்பிரமணியர், ஐயப்பன் சந்நிதிகள் உள்ளன. அம்மனின் எதிரில், துதிக்கையால் ஒருவனை வதம் செய்யும் நிலையில் யானை சிற்பம் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  தோல்வியாதி, வாதம், வாய் பேச இயலாதவர்கள் இங்குள்ள அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் வெள்ளிகிழமைகளில் அபிஷேகம் அர்ச்சனை செய்து தங்கள் வேண்டுதல்களை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  சம்பத்கரீஸ்வரி: அரசுகாத்த அம்மனுக்கு  சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. சம்பத் என்றால் செல்வம். கரி என்றால் யானை. யானைமீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்மவாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் இடம்பெற்றுள்ளது. இவளுக்கு பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி,ஆடி கடைசி வெள்ளியில் அம்மன் உலா நடக்கும்.  
     
  தல வரலாறு:
     
  பார்வதிதேவி காஞ்சியில் தவம் செய்தபோது அரசுகாத்த அம்மன், பச்சை அம்மன், சந்தைவெளியம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமைப் பொறுப்பேற்றவள் அரசுகாத்த அம்மன். சோழமன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் அரசுகாத்த அம்மன் என்று பெயர் வந்ததாக கூறுவர். வலதுகாதில் குண்டலம், இடதுகாதில் தோடு அணிந்து இருப்பாள். இவள் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். இருகோரைப்பற்களும், நான்கு கரங்களில் வலது மேல்கரத்தில் உடுக்கையும், கீழ்க்கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ்க்கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடதுகாலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். வடக்கு நோக்கிய தெய்வங்கள் ஒரு நகரைப் பாதுகாப்பவர்களாக, காவல் தெய்வங்களாக விளங்குவார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் இடம்பெற்றுள்ளது
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar