Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஷீரடி சாய்பாபா
  ஊர்: மேற்கு தாம்பரம்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வருடப்பிறப்பு, வருடத்தின் விசேஷ நாட்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  ஷீரடியில் இருப்பதை போலவே இக்கோயில் அமைந்துள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஷீரடி சாய்பாபா திருக்கோயில் மேற்கு தாம்பரம், சென்னை.  
   
    
 பொது தகவல்:
     
  சுதைச் சிற்பங்கள் தாங்கிய தூண்களுடன் அமைந்த தனிச் சன்னதியில் பிள்ளையார் வீற்றிருக்கிறார். தத்தாத்ரேயர் குருஸ்தானில் தரிசனமளிக்கிறார். அருகிலேயே அனுமனுக்குத் தனிக்கோயில் அமைந்திருக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  நினைத்த காரியம் நடைபெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  அர்ச்சனை ஆராதனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

ஷீரடியில் இருக்கும் ஆலயத்தை நகல் எடுத்தது போலவே அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் நாற்பது அடி உயர கோபுரத்தின் உச்சியில் பறக்கும் கொடி, உலகிற்கு அருளும் மகான் இங்கே இருக்கிறார் வா என்பது போல அசைந்தாடி வரவேற்கிறது. பொன்நிறத்தில் ஒளிரும் எழிலான முகப்பின் நடுவே கதைவடிவில் அமர்ந்து காட்சியளிக்கிறார் ஷீரடி மகான். வணங்கி உள்ளே நுழைந்தால் நேரெதிரே, அமைந்திருக்கிறது மூலஸ்தானம் வெளியே கடுமையான வெப்பம் வீச, உள்ளே மகானின் கருணை மழை நிறைந்திருப்பதால் ஜில் என்று இருக்கிறது. ஐந்தடிக்கும் மேலான உயரத்தில் வெண் பளிங்குக் கல்லால் அமைக்கப்பட்டு, தகதகக்கும் கிரீடம், பளபளக்கும் ஆடை, பொலிவான பூமாலை என எழிலான அலங்காரத்துடன் காட்சிதரும் மகானை தரிசிக்கும்போது, ஆண்டியாக இருந்தாலும் பக்தர்கள். மனதில் அரசனாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் ஷீரடி நாயகர் என்பது தெளிவாகப் புரிகிறது.

தினமும் நான்குகால பூஜைகள், ஷீரடியில் நடப்பதுபோலவே நடப்பதால், ஏராளமான பக்தர்கள் இங்கே வந்து அர்ச்சனை ஆராதனைகளைச் செய்கிறார்கள். மனமுருக நின்று வேண்டுகிறார்கள். வியாழக் கிழமைகளில் விசேஷ பூஜைகளும் நடக்கின்றன. அருகே உள்ள கல்லூரி மாணவர்கள், பேராசியர்களும் அதிக அளவில் வருகிறார்கள். தேர்வுகளுக்கு முன் சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகிறதாம். எல்லோருக்கும் தன் அருளைக் குறைவின்றி வழங்குகிறார் பாபா என்பதற்கு இங்கே வருவோரின் வேண்டுதல்கள் ஈடேறுததே சாட்சி என்கிறார்கள்.

 
     
  தல வரலாறு:
     
  சாய்ராம் பொறியியல் கல்லூரி நிறுவனரின் முயற்சியால் 2010 ல் கட்டத்தொடங்கப்பட்டு, 15-3-2013 அன்று மகா கும்பாபிஷேகம் கண்ட கோயில்,  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஷீரடியில் இருப்பதை போலவே இக்கோயில் அமைந்துள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar