Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சிந்தாமணி விநாயகர்(அஷ்ட கணபதி-5) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சிந்தாமணி விநாயகர்(அஷ்ட கணபதி-5) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சிந்தாமணி விநாயகர்
  ஊர்: தேவூர்
  மாவட்டம்: புனே
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள சிந்தாமணி விநாயகர் சுயம்புவாகவும், இடஞ்சுழியாகவும் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில் தேவூர், புனே, மகாராஷ்டிரா.  
   
    
 பொது தகவல்:
     
  கோயில் பிரகாரத்தில் தீபஸ்தம்பம் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஒரு சமயம் பிரம்மனின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கவலை அதிகமானது. தன் நிலையை உணர்ந்த பிரம்மா, தேவூரில் அமர்ந்து கணநாதனை தியானித்தார். அவரது மனச் சஞ்சலங்களை நீக்கி விநாயகர் அவருக்கு புத்தியும் மனமும் நிலையாக இருக்க அருளினார். ஆலயம் அமைந்துள்ள தேவூர் முலா, முடா நதிக்கரையில் உள்ளது. நதியின் பிரவாகத்தில் எங்கெல்லாம் ஆழம் உள்ளதோ அவ்விடங்கள் எல்லாம் கடம்ப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றன. கோயில் வடதிசையை நோக்கி அமைந்துள்ளது. சிந்தாமணி விநாயகர் இடஞ்சுழிப்பிள்ளையார். அவர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். கண்களில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. சபாமண்டபம் மரத்தால் எழுப்பப்பட்டிருக்கிறது. தியான வழிபாட்டிற்கென தனி இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் மோர்யா கோசாவி என்ற பெரும்பக்தர் இங்கு தவமிருந்தார். விநாயகர் அவருக்குக் காட்சி அளித்ததுடன் இரண்டு புலிகளாக மாறி நகரையும் வலம் வந்தாராம். மராட்டிய பேஷ்வா மாதவராவ், சிந்தாமணி விநாயகரைத் தம் இஷ்ட தெய்வமாக மாற்றிக் கொண்டு தனது மாளிகையையும் இந்நகரில் அமைத்துக் கொண்டார் என்பது கூடுதல் சிறப்பு.  
     
  தல வரலாறு:
     
 

முன் யுகத்தில் அபிஜித் என்ற மன்னன், தன் பட்டத்து ராணி குணவதியுடன் அரசாண்டு வந்தான். எல்லாச் செல்வங்கள் இருந்தும், அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை. வைசம்பாயனர் என்னும் முனிவர், அவர்களை காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள உபதேசித்தார். அவர்களும் அப்படியே செய்தனர். அவர்கள் செய்த கடும் தவத்தினால் ராணி குணவதி ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு கணராஜன் என்ற பெயர் சூட்டப்பட்டது. பலசாலியாக வளர்ந்தாலும் இளவரசனிடம் பொறுமையின்மையே அதிகம் குடிகொண்டது. கணராஜன் ஒருமுறை தனது பரிவாரங்களுடன் வேட்டையாட காட்டிற்குச் செல்கிறான். அவர்கள் களைப்படைந்த நேரத்தில் கபில முனியின் ஆசிரமத்தின் அருகில் இருக்க நேர்ந்தது. இளவரசனை அன்புடன் வரவேற்ற முனிவர், அவர்களை ஆசிரமத்திலேயே தங்கி இளைப்பாற வேண்டுகிறார். தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறான். சிறிது நேரத்தில் அவன் மட்டுமல்லாமல் அவனது முழுப்படைகளும் இளைப்பாற வசதிகளுடன் அறுசுவை உணவும் தயாராகிவிட்டதென கபில முனிவர் தெரிவிக்கிறார். இது எப்படி சாத்தியம்? என கணராஜன் குழம்புகிறான். இளவரசன் மனதை அறிந்து கொண்ட கபிலமுனி, அதற்கு விடையளிக்கிறார்.

இந்திரன் எனக்கு அளித்த சிந்தாமணி என்கின்ற அபூர்வ ஆபரணம் இது! காமதேனு, அட்சயபாத்திரம் போன்று சக்தி வாய்ந்தது. இதன் மூலமே உங்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்தேன் என்று கபிலமுனி கூறியவாறு சிந்தாமணியை கணராஜனுக்குக் காண்பிக்கிறார். ஒளி மிகுந்த அந்த ஆபரணத்தைக் கண்கொட்டாமல் பார்த்த கணராஜனுக்கு பேராசை அதிகமானது. சிந்தாமணியைத் தனக்குத் தருமாறு கபிலமுனியிடம் கேட்கிறான். இதை சற்றும் எதிர்பாராத முனிவர் தடுமாறுகிறார். இந்திரன் தந்தது. அதனால் தர இயலாது என்று பணிவுடன் அவனுக்குத் தெரிவிக்கிறார். பலமுறை வேண்டியும் முனிவர் சிந்தாமணியை தர மறுக்கவே, வெகுண்ட இளவரசன், பொறுமையிழந்து சிந்தாமணியை வலியப் பறித்துச் சென்று விடுகிறான். கபில முனிவர் துக்கத்தில் ஆழ்கிறார். அவர் துர்க்காதேவியின் தீவிர பக்தர். ஒருநாள் அவர் கனவில் வந்த தேவி, விநாயகர் உபாசனையைத் தொடருமாறு அவரை அறிவுறுத்துகிறாள். அதன்படி முனிவர் இடைவிடாமல் விநாயகப் பெருமானை வழிபடத் தொடங்க, கணபதி அவருக்குக் காட்சி தந்து வேண்டியதைக் கேட்கப் பணிக்கிறார். சிந்தாமணி ஆபரணத்தை மீட்டுத் தருமாறு இறைஞ்சுகிறார். அவரது கோரிக்கைக்குச் செவி சாய்க்கிறார், விநாயகர். இளவரசன் கணராஜனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் பெரிய யுத்தம் தொடங்குகிறது. வனத்தில் கடம்ப விருட்சத்தின் கீழ் விநாயகர் கணராஜனை மாய்க்கிறார். மன்னன் அபிஜித் அவரைச் சரணடைந்து சிந்தாமணியைத் தருகிறான். இது நடந்த இடம், தேவூர். கடம்ப தீர்த்தம் என்ற பெயரும் இதற்கு உண்டு. சிந்தாமணி தன்னிடம் இருப்பதைவிட விநாயகரிடம் இருப்பதே சாலச் சிறந்தது என கபிலமுனி முடிவெடுத்து, அதை அவரிடம் அளிக்கிறார். அந்தக் கடம்ப விருட்சத்தின் அருகே சிறிய ஆலயத்தை கபிலமுனி எழுப்பி, விநாயகர் விக்ரகத்தையும் நிறுவுகிறார். அவர்தான் சிந்தாமணி விநாயகர் என்ற பெயருடன் தேவூரில் அருளாசி தருகிறார்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிந்தாமணி விநாயகர் சுயம்புவாகவும், இடஞ்சுழியாகவும் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar