Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முக்தி நிலையம் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு முக்தி நிலையம் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: 243 விக்ரஹங்கம்
  உற்சவர்: ஞானமுக்தி விநாயகர், அமிர்தேஷ்வர், ஷீரடி சாய்பாபா, மும்மூர்த்திகள்
  தல விருட்சம்: 27 நட்சத்திரத்திற்கு உரிய மரம்
  ஊர்: திருமங்கலம்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மகாசிவராத்திரி, ஸ்ரீராமநவமி  
     
 தல சிறப்பு:
     
  ரே இடத்தில் 108 கோயில்களும், அதில் 243 விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8:00 முதல் இரவு 7:30 மணி வரை 
   
முகவரி:
   
  முக்தி நிலையம் என்னும் சத்ய யுக கோயில், திருமங்கலம், மதுரை மாவட்டம்  
   
போன்:
   
  +91 94430 32619, 98432 42619 
    
 பொது தகவல்:
     
  மனித உடம்பில் உள்ள குண்டலினி சக்தியை குறிக்கும் விதத்தில் முக்தி ஸ்துாபி என்னும் கல்துாண் இங்குள்ளது. இதன் அருகில் அசுபதி முதல் ரேவதி உள்ளிட்ட 27 நட்சத்திர தேவதைகள் உள்ளனர். அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரங்களும் இங்குள்ளன. ஞானமுக்தி விநாயகர், அமிர்தேஷ்வர், ஷீரடி சாய்பாபா, மும்மூர்த்திகள், நான்கு வேதங்கள், பாண்டுரங்கன், ராதா கிருஷ்ணர், ராமர், மகாலட்சுமி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, காளி, சுதர்சனர், ஆண்டாள், சப்த ரிஷிகள், 18 சித்தர்கள், 12 ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  வலம் வந்து வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீங்கும். நல்ல நேரம் பிறக்கும். முயற்சி வெற்றி பெறும். 
    
 தலபெருமை:
     
  இங்குள்ள எமதர்மன் கோயில் விசேஷமானது. சாந்த முகத்துடன் புன்முறுவலுடன் உள்ள இவரிடம் பாசக்கயிறு இல்லை. சத்ய யுகத்தில் வாழ்பவர்கள் தர்ம சிந்தனையுடன் இருப்பதால் யாரையும் துன்புறுத்தும் தேவை இருக்காது. காரணம் யாரும் பாவச் செயலில் ஈடுபடாததால் அனைவரும் முக்தி என்னும் மோட்சநிலைக்கு தகுதி பெறுவர். எமனுக்கு அருகில் அவரது உதவியாளர் சித்ரகுப்தர் ஏடு, எழுத்தாணியுடன் இருக்கிறார். இவர்களை தரிசித்தவருக்கு மரண அவஸ்தை உண்டாகாது. நிம்மதியான இறுதிக்காலம் அமையும்.
கலைநயத்துடன் வட்ட வடிவில் அமைக்கப்பட்ட நவராஜ மண்டலம் என்னும் கோயில் இங்குள்ளது. இதன் மைய மண்டபத்தில் கால சக்கரத்தை இயக்கும் கடவுளான காலாதீஸ்வரர் வீ்ற்றிருக்கிறார். சுற்றிலும் உள்ள மண்டபங்களில் 9 கிரகங்கள், 12 ராசி நாயகர்கள், 27 நட்சத்திர தேவதைகள் உள்ளனர். இவர்களை ஒரு சேர வலம் வந்து வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீங்கும். நல்ல நேரம் பிறக்கும். முயற்சி வெற்றி பெறும். முக்திநிலையம் சார்பாக சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு தையல் பயிற்சி, மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட மாலைநேர பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஆடி அமாவாசையை ஒட்டி மூன்று நாள் சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் அன்னதானம் நடக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  கலியுகத்தின் முடிவில் தீமை எல்லாம் அழிந்து நல்லவர்கள் வாழும் சத்ய யுகம் துவங்கும். அதை வரவேற்கும் விதத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் முக்தி நிலையம் என்னும் சத்ய யுக கோயில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே இடத்தில் 108 கோயில்களும், அதில் 243 விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள நவராஜ மண்டலத்தை தரிசிப்பவருக்கு வாழ்வில் நல்ல நேரம் உண்டாகும்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஒரே இடத்தில் 108 கோயில்களும், அதில் 243 விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar