Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தீர்த்தமுடையவர்
  அம்மன்/தாயார்: பெரியநாயகி
  தீர்த்தம்: சகல தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவாகமம்
  ஊர்: தீர்த்தாண்டதானம்
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களிலும், சிவராத்திரி, பிரதோஷ காலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  மேற்கு நோக்கிய தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில், தீர்த்தாண்டதானம் - 623 409, ராமநாதபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  இங்கு தினம் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. நந்தீஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி, பூதேவி, மகாவிஷ்ணு, திருஞானசம்பந்தர், சூரியபகவான், தெட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னதி இருக்கிறது.
 
     
 
பிரார்த்தனை
    
 

கேட்டதையெல்லாம் கொடுக்கும் இறைவன்.



 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  வருணபகவான் உண்டாக்கிய தீர்த்தம் வருணதீர்த்தமாகும். கோயிலின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த தீர்த்தம் பராமரிப்பு இல்லாததால் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இந்த தீர்த்தம் பெருமை மிக்கது.

இங்கே நீராடினால், உலகிலுள்ள அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமல் போனது. பக்தர்கள் இங்கு குளிக்க முடியாமல் அருகிலுள்ள கடலில் நீராடுகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  ராமபிரான், லட்சுமணனுடன் சீதா பிராட்டியை தேடி இவ்வழியே இலங்கைக்கு சென்றார். அப்போது, இங்கு சற்றுநேரம் இளைப்பாறினார். அவருக்கு தாகம் எடுக்கவே, வருணபகவான் ஒரு தீர்த்தம் உண்டாக்கி கொடுத்தார். அந்த நீரைப் பருகிய ராமபிரான் மனம் மகிழ்ந்தார். ராமபிரான் வந்திருப்பதை அறிந்த அகத்திய முனிவர் இங்கு வந்தார்.

ராவணன் சீதையை சிறையெடுத்து சென்றதால் ராமனின் மனம் புண்பட்டுள்ளதை அறிந்த அகத்திய மாமமுனிவர் ராமனுக்கு ஒரு யோசனை சொன்னார்.

""ராமா! ராவணன் சிறந்த சிவ பக்தன். ஆகையால் சிவன் அருள்பெற்றால் தவிர அவனை வெல்லமுடியாது. நீ இங்கே குடிகொண்டிருக்கும், என்றும் பழம்பதிநாதராகிய, சகலதீர்த்தமுடையவரை ஐந்து முறை வணங்கிச்செல். வெற்றி கிடைக்கும்,'' என கூறினார். அவ்வாறே ராமபிரான் வழிபட சிவபெருமான் தேவியுடன் காட்சியளித்தார். உடனிருந்த வருணன் இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்து ஆனந்தப்பட்டார். இறைவனை அதே இடத்தில் கோயில் கொண்டருளவும், ராமபிரான் தாகம் தீர்த்த வருணதீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வணங்குபவர்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் எனவும் வேண்டினார்.

சிவபெருமானும் மேற்கு முகமாக எழுந்தருளினார்.

சகலதீர்த்தமுடையவர், சர்வதீர்த்தேஸ்வரர் என்ற பெயர்களுடன் சுவாமி பெயர் விளங்குகிறது. தேவியின் திருப்பெயர் பெரியநாயகி அம்மன். ராமபிரான் நீர் வேட்கையை தீர்த்ததால் தீர்த்தாண்டதானம் என அழைக்கப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மேற்கு நோக்கிய தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar