Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அன்னகாமு
  ஊர்: ஒட்டன்சத்திரம்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளி செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் "மூங்கிலடி அன்னகாமு' என்று அழைக்கப்பட்டாள். இதற்கான ஆதாரம் கோயில் கல்வெட்டுக்களில் இன்றும் உள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம் - 624 619, திண்டுக்கல் மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
 

இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலங்கள் :அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்,அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில், அருள்மிகு இடும்பன் திருக்கோயில்,அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்



 
     
 
பிரார்த்தனை
    
  காமாட்சியம்மன் தன்னை நாடிவரும் பெண்களுக்கு குழந்தைபாக்கியம் கொடுக்கும் சக்தி உள்ள தெய்வமாகும் .

திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் நிலவி வருகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயிலில் அஷ்டலட்சுமியும், சக்திவிநாயகரும் அமர்ந்துள்ளனர்.

63 நாயன்மார்களை நினைவு படுத்தும் விதமாக 63 தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  1942-ம் ஆண்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பெரியாக்கவுண்டர் என்பவரின் சொந்த பராமரிப்பில் கோயில் இருந்துள்ளது. அவர் காமாட்சியம்மனுக்கு காவல் தெய்வமான கருப்பணசாமி சிலையை உருவாக்கி ஸ்தாபித்துள்ளார். அக்காலத்தில் இக்கோயிலில் சிவராத்திரி விழா மட்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

தனியாரின் பராமரிப்பில் மரத்தடியில் சிறியதாக இருந்த கோயிலை கோபுரத்துடன் உருவாக்க திருப்பணிக்குழு உறுப்பினர்கள் நிதி வசூல் செய்து கோபுரம் எழுப்பியுள்ளனர். தனலட்சுமி என்பவர் காமாட்சியம்மன் சிலையை கோயிலுக்கு வழங்கி உள்ளார். அம்மனின் தலையில் அலங்கரிக்கும் வெள்ளி கிரீடம் மிகவும் அழகாக இருக்கும்,

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளி செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் "மூங்கிலடி அன்னகாமு' என்று அழைக்கப்பட்டாள். இதற்கான ஆதாரம் கோயில் கல்வெட்டுக்களில் இன்றும் உள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar