| இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம்.
மலைகோயில் 1200 படிகள். கடம்பர் கோயில் (குளித்தலை), திருவாட்போக்கி, திரு ஈங்கோய்மலை ஒரே நாளில்-காலை, பகல், மாலையில் தரிசிக்கும் மரபு இங்கு உள்ளது. சித்திரை மாதங்களில் சூரிய கிரணங்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 64 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|