Advertisement

ராமானுஜர் மணிமண்டப பெருமாளுக்கு கருடசேவை

சேலம்: ராமானுஜர் மணிமண்டபத்திலுள்ள பெருமாள் சுவாமிகளுக்கு, இரண்டாமாண்டு பவித்ர உற்சவம் கோலாகலமாக நடந்தது.

சேலம், எருமாபாளையம், ராமானுஜர் மணிமண்டப வளாக நாற்புறமும், ரங்கநாதன், வரதராஜன், திருவேங்கடமுடையான், சம்பத்குமாரன் ஆகிய பெருமாள் சுவாமிகள் காட்சியளிக்கின்றனர். அவர்களுக்கு, கார்த்திகையை முன்னிட்டு, இரண்டாமாண்டு திருப்பவித்ர உற்சவம், கடந்த, 17ல், அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. மறுநாள், பெருமாள் சுவாமிகள், ராமானுஜருக்கு, திருபவித்ர மாலை சாற்றி, சிறப்பு யாக பூஜை நடந்தது. நேற்று, கருடசேவை நடந்தது. இதற்காக, அலங்கரித்து வைத்திருந்த பஞ்சலோக கருட வாகனத்தில், பெருமாள் சுவாமிகளை, சர்வ அலங்காரத்தில் எழுந்தருளச்செய்து, கோவிலை வலம் வரச்செய்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, மன்னார்குடி வெங்கடேச தீட்சிதர் தலைமையில் பட்டாச்சாரியார்கள், பகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டி நிர்வாகிகள், உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement