Advertisement

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை தண்ணீர்

மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை தண்ணீரை திருப்பி விட வேண்டும், என, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது. இதன் தாழ்த்தப்பட்டோர் பிரிவு கோட்ட பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் பொதுப்பணி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு: தற்போது பருவமழை பெய்து வைகையில் தண்ணீர் செல்கிறது. கால்வாயை சீரமைத்து வைகை தண்ணீர் வீணாகாதவாறு தெப்பக்குளத்திற்கு திருப்பி விட்டு நிரப்ப வேண்டும். இதன்மூலம் தெப்பத்திருவிழா நடத்தலாம், என கூறியுள்ளார்.


Advertisement
 
Advertisement