Advertisement

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள, திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம்பிடித்து இழுத்தனர்.

நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, வடம்பிடித்து இழுத்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில் ராகுபகவான் தனி கோவில் கொண்டுள்ளார். நாகநாத சுவாமி கோவிலில், கார்த்திகை கடை ஞாயிறு விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம்பிடித்து இழுத்தனர். இன்று காலை 10 மணிக்கு, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா புறப்பாடும், மதியம் 2 மணிக்கு, சூரிய புஷ்கரணியில், கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

Advertisement
 
Advertisement