Advertisement

செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

செஞ்சி; செஞ்சி அடுத்த தாலுகா செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் உள்ள யோக சர்வேஸ்வர சனி பகவான் சன்னிதியில் சனிபெயர்ச்சி விழா நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு சிவஜோதி மோன சித்தர் தலைமையில் விசஷே ஹோமம் நடந்தது. 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து யோக சர்வேஸ் வரன் சனிபகவானுக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடந்தது.உற்சவ மூர்த்தி யோக சர்வேஸ்வர சனிபகவான் பூ பல்லக்கில் கோவில் உலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement