Advertisement

செல்லியாண்டியம்மன் கோவிலில் விழாவை முன்னிட்டு கம்பம் நடல்

பவானி: பவானியில் உள்ள செல்லியாண்டியம்மன், மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோவில்கள் உள்ளன. இந்தாண்டு விழா கடந்த, 18ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கி, தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று மாலை, கோவில் வளாகத்தில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மார்ச், 3ல், அம்மனுக்கு நீராட்டு நிகழ்ச்சி, 4 ல், எல்லையம்மன் கோவிலிலிருந்து அம்மன் அழைத்தல், பொங்கல் வழிபாடு நடக்கிறது. 5ல், தேரோட்டமும், கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Advertisement
 
Advertisement