Advertisement

கொரோனா வைரஸ் பீதி: கோவிலில் யாகம்

ஆத்தூர்: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டி, ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர், கோட்டை பகுதியில் உள்ள, சிஷ்ட நதி வடக்கு கரையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனுறை காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று, இக்கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு, பொதுமக்கள் அனைவரும் நீண்ட ஆயுளோடு இருக்கவேண்டி, அமிர்த சஞ்சீவினி ருத்ர தேவதா மற்றும் மிருத்யுஞ்சய ?ஹாமம் நடந்தது. மேலும், உலக மக்களுக்காக அயராது உழைக்கும் பிரதமர், தமிழக முதல்வர், அமைச்சர்கள், போலீசார், மருத்துவர், செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் , வைரஸ் பாதிப்பில் இல்லாமல் இருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Advertisement
 
Advertisement