நாடு முழுவதும் நாளை(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு விளக்கேற்றும் படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வைரஸ் போன்ற நோய் பரப்பும் கிருமிகள் இருளில் வளரும், தீய சக்தியை அழிக்க ஒரே வழி ஒளியை மையமாகக் கொண்டிருக்கும் அகல் விளக்குகளை வாமன துவாதசியான இந்நாளில் ஏற்றுவது நல்லது என்கிறது புராணம். இந்த நேரத்தில் செயற்கையான மின் விளக்குகள் எரிவது கூடாது. இதனால், மின்விளக்குகளை அணைக்கும்படி பிரதமர், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில், பங்கேற்கும் விதத்தில் மக்கள் நாளை இரவு 9:00 முதல் 9:09 மணி வரை அகல்விளக்கு, அலைபேசியில் உள்ள விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் ஏற்றி வழிபட்டால் கொரோனா வைரஸ் போன்ற தீய சக்திகள் அழியும். எதிர்மறை எண்ணம் மறைந்து ஆரோக்கிய வாழ்வு ஏற்படும்.