Advertisement

கள்ளழகர் கோயிலில் வைகாசி உற்ஸவம்: மே 27ல் துவக்கம்

மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மே., 27 முதல் ஜூன் 5 வரை கோயில் வளாகத்தில் மாலை 5:00 - இரவு 7:00 மணி வரை நடக்கிறது.
சோலைமலை முருகன் கோயில் வைகாசி திருவிழா மே., 26 முதல் ஜூன் 4 வரை நடக்கிறது. மே 26 முதல் தினமும் காலை 11:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை, மாலை 6:00 மணிக்கு மகா தீபாரதனை, ஜூன் 4 வைகாசி விசாகத்தன்று காலை 11:00 மணிக்கு சண்முகருக்கு மகா அபிஷேகம் நடக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்தில் மே 31 வரை பக்தர்கள் அனுமதியின்றி நடக்கும். ஜூன் 1 முதல் அரசின் வழிகாட்டுதல்படி நடக்கும் என உதவிகமிஷனர் அனிதா தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Advertisement