Advertisement

தமிழகத்திற்கு 1 லட்சம் திருப்பதி லட்டு

திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனம் கிடைக்கும் வரை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்ப முடிவு செய்தது.

இதன்படி, நேற்று முதல் ஆந்திராவில், 13 மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில், லட்டு விற்பனை துவங்கியது. இதற்கு, பக்தர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதேபோல், தமிழகம், தெலுங்கானாவிலும், லட்டு விற்பனையை விரைவாக துவங்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அம்மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், தமிழகத்திற்கு ஒரு லட்சம் லட்டுகள்; தெலுங்கானாவிற்கு, 50 ஆயிரம் லட்டுகள் அனுப்ப, தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது.

Advertisement
 
Advertisement