Advertisement

அழகர்கோவில் வைகாசி வசந்த உற்ஸவம் நாளை துவக்கம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் அனிதா தெரிவித்துள்ளதாவது: இக்கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மே 27 முதல் ஜூன் 5 வரை கோயில் வளாகத்தில் தினமும் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும்.

சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி திருவிழா இன்று(மே 26) முதல் ஜூன் 4 வரை நடக்கிறது. தினமும் காலை 11:00 மணிக்கு சண்முக அர்ச்சனையும், மாலை 6:00 மணிக்கு தீபாராதனையும், ஜூன் 4 வைகாசி தினத்தன்று காலை 11:00 மணிக்கு சண்முகருக்கு மகா அபிேஷகமும் நடக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஜூன் 1 முதல் அரசு வழிகாட்டுதல்படி நிகழ்ச்சிகள் நடக்கும், என தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Advertisement