வால்பாறை: வால்பாறையில், சத்யசாய் சமிதி சார்பில், ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.வால்பாறை கக்கன்காலனி ஸ்ரீசத்யசேவா சமிதி சார்பில், கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பால் வறுமையில் வாடும், கூலி தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.சத்யசாய் சமிதியின் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் உத்தரவின் பேரில், நிவாரண பொருட்களை வால்பாறை சத்யசாய் சேவா சமிதி கன்வீனர் சண்முகவேலு, ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி ஆகியோர், 50 குடும்பங்களுக்கு வழங்கினர்.
சத்யசாய் சமிதி சார்பில் நிவாரணம்
பதிவு செய்த நாள்: ஜூன் 06,2020