திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா தடை உத்தரவால் பங்குனி, விசாகம், ஊஞ்சல் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. ஆண்டு தோறும் ஆடி கடைசி வெள்ளி 1008 விளக்கு பூஜை நடக்கும். கொரோனா தடை உத்தரவு நீடிப்பதால் இந்த ஆண்டு ஆக., 14ல் நடக்கும் 1008 விளக்கு பூஜை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆடி கார்த்திகையன்று (ஆக., 12) சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்று சுவாமி, தெய்வானை கோயிலுக்குள் திருவாட்சி மண்டபத்தை வலம் வருவர் என துணை கமிஷனர் பொறுப்பு ராமசாமி தெரிவித்தார்.