Advertisement

மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா

கோவை:மாதா அமிர்தானந்தமயி தேவி பிறந்தநாள் விழா, ஒவ்வொரு ஆண்டும் சமூக சேவை தினமாக கொண்டாடப்படும். இந்தாண்டு, உலக அமைதிக்கான பிரார்த்தனை தினமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக, முந்தைய ஆண்டுகளில் சேவை திட்டங்களும், விழா நிகழ்ச்சிகளுமாக லட்சக்கணக்கான பக்தர்கள், அமிர்தபுரியில் கூடுவது உண்டு. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், இயற்கை சீற்றத்தாலும் மக்கள் அல்லல்படும் இவ்வேளையில், விழாக்கள் வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக, ஆசிரம நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதனால், உலக அமைதிக்கும், அனைத்து உயிரினங்கள் நன்மைக்கும் பிரார்த்தனைகள் செய்வதோடு, ஆன்மிக சாதனைகளோடு, மாதா அமிர்தானந்தமயி தேவி, பிறந்தநாளான செப்., 27ஐ (ஞாயிற்றுக்கிழமை) வரவேற்க வேண்டும். அன்றைய தினம் காலை, 6:00 முதல் மதியம், 1:00 மணி வரை, உலக அமைதிக்கான பிரார்த்தனையை கடைபிடிக்க வேண்டும் என, ஆசிரமத்தின் துணை தலைவர் சுவாமி அமிர்த ஸ்வரூபானந்தபுரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
 
Advertisement