Advertisement

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பிரதேஷ பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சாமி கோவிலில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு புரட்டாசி மாத பிரதோஷ பூஜை நேற்று மாலை நடந்தது. மாலை,5:30 மணிக்கு , சந்தனம் திருநீறு, இளநீர,மஞ்சள், தேன் ,பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது தொடர்ந்து மாலை 6 :00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சுவாமியை தரிசித்து சென்றனர்.

Advertisement
 
Advertisement