Advertisement

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறைக்கு பக்தர்கள் வந்த நிலையில் காலை 7:00 மணி முதல் வனத்துறை சோதனைக்கு பிறகு மலையேற அனுமதிக்கபட்டனர். மலைகோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். மழையால் அக்.2 காலை 10:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கபடுவார்கள், என செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.இதேபோல், சதுரகிரி மலையடிவாரம் சர்வேஸ்வரர் தியான நிலையத்தில் சிறப்பாக பிரதோஷ பூஜை ஆர். ஆர் தலைமையில் சிறப்பாக நடந்தது.

Advertisement
 
Advertisement